தமிழகத்தில் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி; வேலை வாய்ப்பு தேர்வு நடத்தலாம்
1 min read
Permission to open shops in Tamil Nadu till 9 pm; Placement selection can be conducted
10.7.2021
தமிழகத்தில், கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கூடுதல் தளர்வுகளுடன் வரும் 19-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
- மத்திய மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக எழுத்து தேர்வு நடத்த அனுமதி
- அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படலாம்
- உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் 9 மணி வரை செயல்படலாம்
- புதுச்சேரிக்கு பஸ் சேவையை துவக்கலாம்
- புதுச்சேரி தவிர அண்டை மாநிலங்களுக்கு பஸ் சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை
- பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், அரசியல் மற்றும் மதம் சார்ந்த திறக்க தடை நீடிக்கிறது.
- திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மட்டும் அனுமதி
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.