தமிழகத்தில் 2,775 பேருக்கு கொரோனா குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு; 47 பேர் சாவு
1 min read
Corona low daily govt impact on 2,775 people in Tamil Nadu; 47 dead
11.7.2021
தமிழகத்தில் 2,775 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 47 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்ற 2,775 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,18,786 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,583 பேர் ஆண்கள், 1,192 பேர் பெண்கள்.
இன்று 3,188 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,53,061 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 47 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,418 ஆக அதிகரித்து உள்ளது.
கோவையில்298 பேருக்கும், தஞ்சையி் 210பேருக்கும், ஈரோட்டில் 198 பேருக்கும், சேலத்தில் 175 பேருக்கும், சென்னையில் 171 பேருக்கும், திருச்சியில் 108 பேருக்கும், திருப்பூரில் 163 பேருக்கும், செங்கல்பட்டில் 144 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 18 பேருக்கும், தென்காசியில் 20 பேருக்கும், தூத்துக்குடியில் 45 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. நெல்லையில் ஒருவர் இன்று கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.