இந்தியாவில் 41,806 பேருக்கு கொரோனா; 581 பேர் சாவு
1 min read
Corona for 41,806 people in India; 581 deaths
15.7.2021
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 581 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வந்தது. ஆனால் அவ்வப்போது அதன் பாதிப்பு கொஞ்சம் அதிகரி்த்து மக்களை பீதி அடைய வைக்கிறது.
இந்தியாவின் தற்போதைய கொரோனா நிலவரம் பற்றி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 806 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். (முந்தைய நாள் பாதிப்பு 38,792 ஆக இருந்தது. ). இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 09 லட்சத்து 87 ஆயிரத்து 880ஆக உள்ளது.
581 பேர் சாவு
கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 581 பேர் உயிரிழந்து உள்ளனர். (முந்தைய நாள் இறப்பு 624 ஆக இருந்தது. நேற்று சற்று குறைந்துள்ளது. ) இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,11,989 ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.32 சதவீதமாக உள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 39,130 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 01 லட்சத்து 43 ஆயிரத்து 850 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.28 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,32,041 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.39 சதவீதமாக உள்ளது.
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39 கோடியே 13 லட்சத்து 40 ஆயிரத்து 491 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.