தேசத்துரோக சட்டத்தை கடைப்பிடிப்பது ஏன்?-சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
1 min read
Why comply with treason law? -Supreme Court question
15.7.2021
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தேசத்துரோக சட்டத்தை கடைப்பிடிப்பது ஏன்? என்று சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
தேசதுரோக வழக்கு
சுப்ரீம் கோர்ட்டில் ல் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஓய்வு பற்ற மேஜர் எஸ்.ஜி.ஓம்பட்கேர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,’தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்ய வழிவகுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ஏ ரத்து செய்யக்கோரி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். அவர்கள் கூறியதாவது:-
தற்போது தேவையா?
ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட தேசதுரோக வழக்கிற்கான சட்டப்பிரிவு தற்போது தேவையா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தேசத்துரோக சட்டத்தை கடைப்பிடிப்பது ஏன்?
மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட தேச துரோக சட்டம், விடுதலை பெற்ற பின்னரும் தேவைப்படுகிறதா?
தவறாக பயன்படுத்தப்படுகிறது
தேச துரோக வழக்கு என்பது ஒரு தச்சரிடம் மரத்தை வெட்ட கொடுக்கப்பட்ட ரம்பம் போன்றது. அந்த ரம்ன்பத்தை கொண்டு ஒட்டுமொத்த காட்டையும் தற்போது அழிப்பது போன்று உள்ளது. விசாரணை அமைப்புகளால் தேச துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அது வேதனை அளிக்கிறது.
இந்த சட்டம் மத்திய அரசுக்கு குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகள் மீதும் அப்பாவி மக்கள் மீதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது.இதற்கு போலீஸ் அதிகாரிகள் பொறுப்பேற்பதில்லை.
தேச துரோக வழக்கில் தண்டனை பெறுபவர்களை பார்த்தால் அதன் எண்ணிக்கை மிக மிக குறைவு. இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.