July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,312 பேருக்கு கொரோனா; பேர் 46 பேர் சாவு

1 min read

Corona for 2,312 people in Tamil Nadu today; 46 people were killed

16.7.2021

தமிழகத்தில் இன்று மட்டும் 2,312 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 46 பேர் உயிரிழந்து உள்ளனர்.

குறைந்த வரும் கொரோனா

தமிழகத்தில் கடந்த 51 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 65 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 2,312 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,31,118 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,360 பேர் ஆண்கள், 952 பேர் பெண்கள்.

தமிழகத்தில் இன்று 2,986 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,68,236 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 46 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,652 ஆக அதிகரித்து உள்ளது.

கோவை

கோவையில் இன்று 252 பேருக்கும், சேலத்தில் 168 பேருக்கும், தஞ்சாவூரில் 158 பேருக்கும், ஈரோட்டல் 152 பேருக்கும் சென்னையில் 144 பேருக்கும், திருப்பூரில் 138 பேருக்கும், செங்கல்பட்டில்127 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லையில் இன்று 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர். தென்காசியில் இன்று 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று அந்த மாவட்டத்தில் உயிரிழப்பு இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 26 பேர் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.