தமிழகத்தில் 1,971 பேருக்கு கொரோனா; 28 பேர் சாவு
1 min read
Corona for 1,971 people in Tamil Nadu; 28 deaths
19.7.2021
தமிழகத்தில் இன்று 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 28 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா குறைந்தது
தமிழகத்தில் கடந்த 54 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 68 நாட்களாக குறைந்து வருகிறது.
இது தொடர்பாக இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,971 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,37,373 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,139 பேர் ஆண்கள், 832 பேர் பெண்கள்.
இன்று கொரேனாவில் இருந்து 2,558 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,76,339 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,752 ஆக அதிகரித்து உள்ளது.
நெல்லை
கோவையில் 209 பேருக்கும், சென்னையல் 147 பேருக்கும், சேலத்தில் 136 பேருக்கும், ஈரோட்டில் 122 பேருக்கும், செங்கல்பட்டில் 116 பேருக்கும், திருப்பூரில் 112 பேருக்கும், தஞ்சையில் 108 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 18பேருக்கும் தென்காசியில் 11 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 15 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.