June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,904 பேருக்கு கொரோனா; 30 பேர் சாவு

1 min read

Corona for 1,904 people in Tamil Nadu today; 30 deaths

20.7.2021
தமிழகத்தில் இன்று 1,904 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று கொரோனாவுக்கு 30 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கடந்த 55 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 69 நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை நேற்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,904 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,39,277 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,094 பேர் ஆண்கள், 810 பேர் பெண்கள். இன்று 2,439 பேர் கொரேனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்ந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,78,778 ஆக உயர்ந்துள்ளது.

30பேர் சாவு

தமிழகத்தில்இன்று கொரோனாவுக்கு 30 பேர் இறந்துள்ளவர். இவர்களையும் சேர்த்து இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,782 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கோவையில் இன்று 204 பேருக்கும், சென்னையில் 141 பேருக்கும், சேலவத்தில் 133 பேருக்கும், ஈரோட்டில் 129 பேருக்கும், செங்கல்பட்டில் 111 பேருக்கும், திருப்பூரில் 106 பேருக்கும், தஞ்சையில் 102 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 27 பேருக்கும், தென்காசியில்10 பேருக்கும், தூத்துக்குடியில் 12 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் இன்று உயிரிழப்பு இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.