June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,891 பேருக்கு கொரோனா; 27 பேர் சாவு

1 min read

Corona for 1,891 people in Tamil Nadu today; 27 deaths

21.7.2021

தமிழகத்தில் இன்று 1,891பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 27பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த 56 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 70 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் 1,891 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,41,168 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,090 பேர் ஆண்கள், 801 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்று மட்டும் 2,423 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,81,201 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தமிழகத்தில் 27 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,809 ஆக அதிகரித்து உள்ளது.

நெல்லை

கோவையில் 183 பேருக்கும், ஈரோட்டில் 141 பேருக்கும், சென்னையில் 138 பேருக்கும், சேலத்தில் 119 பேருக்கும் செங்கல்பட்டில் 102 பேருக்கும், திருப்பூரில் 97 பேருக்கும், தஞ்சையில் 90 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 32பேருக்கும், தென்காசியில் 12 பேருக்கும்,தூத்துக்குடியி்ல் 15 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் ஒருவர் இறந்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.