தமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கொரோனா;24 பேர் சாவு
1 min read
Corona for 1,830 people in Tamil Nadu today; 24 deaths
23.7.2021
தமிழகத்தில் இன்று 1,830 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 24 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,516 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த 58 நாட்களாக கொரேனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 72 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:* தமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,44,870 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனாவால் உறுதியானவர்களில் 1,062 பேர் ஆண்கள், 768 பேர் பெண்கள். இன்று 2,516 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை அடுத்து இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,86,192 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தமிழகத்தில் 24 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,862 ஆக அதிகரித்து உள்ளது.
நெல்லை
கோவையில் 177 பேருக்கும், ஈரோட்டில் 135 பேருக்கும், சென்னையில் 130 பேருக்கும், சேலத்தில் 110 பேருக்கும், தஞ்சையில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 96 பேருக்கும், திருப்பூரில் 92 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை உள்பட 21 மாவட்டங்ஙகளில் இன்று உயிரிழப்பு இல்லை
நெல்லையில் இன்று 36 பேருக்கும், தென்காசியில் 21 பேருக்கும், தூத்துக்குடியில் 26 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில்இன்று ஒருவர் இறந்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.