June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 35,342 பேருக்கு கொரோனா; 483 பேர் சாவு

1 min read

Corona for a further 35,342 in India; 483 deaths

23-7-2021

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 35,342 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 483 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

35,342 பேருக்கு கொரோனா

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிகாக 35,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 12 லட்சத்து 93 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 3,881 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 3 கோடியே 4 லட்சத்து 68 ஆயிரத்து 79 பேர் வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.36 ஆகக் குறைந்துள்ளது.

483 பேர் சாவு

கொரோனாவால் ஒரே நாளில் 483 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 19 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நாட்டில் 42.34 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.