ஆபாச வீடியோ வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீஸ் விசாரணை
1 min read
Porn video case: Actress Shilpa Shetty under police investigation
23-7-2021
ஆபாச வீடியோ வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மும்பையில் பெண்களை ஆபாச வீடியோ பதிவு செய்து இணைய செயலில் பதிவேற்றம் செய்த வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்தரா,47 கைதானார். அவரிடம் மும்பைகுற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவரது போலீஸ் காவலை 27 ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் வங்கி கணக்குகளை வருமானவரித்துறை ஆய்வு செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது வீடு, அலுவலகங்களில் ரெய்டும் நடந்தது. விரைவில் ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற மும்பை குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.