July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,819 பேருக்கு கொரோனா; 27 பேர் சாவு

1 min read

Corona for 1,819 people in Tamil Nadu today; 27 deaths

24.7.2021
தமிழகத்தில் இன்று 1,819 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,583 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த 59 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 73 நாட்களாக குறைந்து வருகிறது.

இது தொடர்பாக இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று மட்டும் 1,819 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,46,689 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,026 பேர் ஆண்கள், 793 பேர் பெண்கள். இன்று 2,583 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,88,775 ஆக உயர்ந்துள்ளது.

27 பேர் சாவு

இன்று தமிழகத்தில் 27 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,889 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கோவையில் இன்று 175 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும், சென்னையில் 127 பேருக்கும், சேலத்தில் 107 பேருக்கும், தஞ்சையி் 96 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லை 33 பேருக்கும், தென்காசியில் 9 பேருக்கும், தூத்துக்குடியல் 23 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தென்காசியில் இன்று ஒருவர் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.