June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் சாவு

1 min read

Corona for 1,990 people in Tamil Nadu today; 26 deaths

1/8/2021

தமிழகத்தில் இன்று 1,990 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டு உள்ளது. 26 பேர் இறந்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,61,587 ஆக உயர்ந்துள்ளது.

26 பேர் சாவு

இன்று மேலும் 26 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,102 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,156 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,06,961 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 20,524 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவை

கோவையில் இன்று 230 பேருக்கும், ஈரோட்டில் 180 பேருக்கும் சென்னையில் 175 பேருக்கும், செங்கல்பட்டில் 133 பேருக்கும், தஞ்சாவூரில்126 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டியிப்பட்டு உள்ளது.
நெல்லையில் 17 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பு இல்லை. தென்காசியிலும் 10 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு இல்லை. தூத்துக்குடியில் 14 பேர் பாதித்த நிலையில் இன்று ஒருவர் இறந்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.