தமிழகத்தில் இன்று 1,908 பேருக்கு கொரோனா; 29 பேர் சாவு
1 min read
Corona for 1,908 people in Tamil Nadu today; 29 deaths
3.8.2021
தமிழகத்தில் இன்று 1,908 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளனர். 29 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,047 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் இன்று 1,908 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,65,452 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,104 பேர் ஆண்கள், 804 பேர் பெண்கள். இன்று 2,047 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,11,076 ஆக உயர்ந்துள்ளது.
29 பேர் சாவு
இன்று 29 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,159 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
கோவையி்ல் இன்று 208 பேருக்கும், சென்னையில் 203 பேருக்கும், ஈரோட்டில் 181 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும், தஞ்சாவூரில் 118 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருப்பூரில் 5 பேரும், கோவையில் 4 பேரும், சேலத்தில் 4 பேருக்கும், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், சென்னை, திண்டுக்கல், ஈரோடு, பெரம்பலூர், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லை இன்று 21 பேருக்கும், தென்காசியில் 10 பேருக்கும், தூத்துக்குடியி்ல் 20 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.