தமிழகத்தில் மேலும் 1,969 பேருக்கு கொரோனா; 29 பேர் சாவு
1 min read
Corona for another 1,969 in Tamil Nadu; 29 deaths
7/8/2021
தமிழகத்தில் புதிதாக 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 29 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று தமிழக சுகாதார துறை கொரோனா நிலவரம் பற்றி வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,65,325 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,85,36,958 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.
இதில், தமிழகத்தில் இன்று 1,969 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று முன்தினம் 1,985 பேருக்கும், வியாழக்கிழமை 1,997 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25,73,352 ஆக அதிகரித்துள்ளது.
29 பேர் சாவு
தமிழகத்தில் ஒரே நாளில் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,289 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து 1,839 பேர் இன்று குணமடைந்த நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 25,18,777 ஆக உயர்வடைந்து உள்ளது.
சென்னை
சென்னையில் 194 பேர் கொரோனாவால் இன்று பாதிப்படைந்துள்ளனர். கொரோனா வார்டில் 20,286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவையில் இன்று 223 பேருக்கும், ஈரோட்டில் 198 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும், தஞ்சையில் 110 பேருக்கும், சேலத்தில் 91 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையி்ல் இன்று 22 பேருக்கும், தென்காசி 5 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் இன்று உயிரிழப்பு இல்லை.