June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,956 பேருக்கு கொரோனா; 28 பேர் சாவு

1 min read

Corona for 1,956 people in Tamil Nadu today; 28 deaths

8.8.2021
தமிழகத்தில் இன்று 1,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 1807 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழக கொரோனா நிலவரம் பற்றி இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் 1,956 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,75,308 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,86,97,187 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,083 பேர் ஆண்கள், 873 பேர் பெண்கள். 1,807 பேர் கொரோனா இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,20,584 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 28 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,317 ஆக அதிகரித்து உள்ளது.

கோவை

கோவையில் இன்று 241 பேருக்கும், சென்னையில் 187 பேருக்கும், ஈரோட்டில் 185 பேருக்கும், செங்கல்பட்டு 105 பேருக்கும், தஞ்சையில் 97 பேருக்கும், திருவள்ளூரில் 91 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நெல்லையில் இன்று 35 பேருக்கும், தென்காசி 6 பேருக்கும், தூத்துக்குடியில் 16 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தென்காசியில் இன்று ஒருவர் இறந்துள்ளார்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.