June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பயங்கரவாதிகள் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் மனைவியுடன் பாரதீய ஜனதா தலைவர் பலி

1 min read

Bharatiya Janata Party leader killed along with his wife in a terrorist attack

9.8.2021
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் குல்காம் மாவட்ட பாரதீய ஜனதா கிஷான் மோச்சா தலைவர் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள லால் சவுக் பகுதியில் இன்று மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் குல்காம் மாவட்ட பாஜக கிஷான் மோச்சா தலைவர் ரசூல் டார் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹாரா பனோ ஆகிய இருவரும் பயடுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாவு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ரசூல் டார் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹாரா பனோ ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

பாஜக தலைவர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.