தமிழகத்தில் இன்று 1,893 பேருக்கு கொரோனா; 27 பேர் சாவு
1 min read
Corona for 1,893 people in Tamil Nadu today; 27 deaths
10/8/2021
தமிழகத்தில் இன்ற 1,893 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டு உள்ளது. 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 1930 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,893 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,79,130 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,086 பேர் ஆண்கள், 807 பேர் பெண்கள். இன்று 1,930 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,24,400 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 27 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,367 ஆக அதிகரித்து உள்ளது.
கோவையில் இன்று 224 பேருக்கும், சென்னையில் 209 பேருக்கும், ஈரோட்டில் 169 பேருக்கும், செங்கல்பட்டில் 105 பேருக்கும், தஞ்சையில் 97 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது.
நெல்லையில் இன்று 27 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 12 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் இன்று உயிரிழப்பு இல்லை.