நிறைவடைய 2 நாட்களே உள்ள நிலையில் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
1 min read
Adjournment without mentioning the date of the Parliament with only 2 days to complete
11.8.2021
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைய 2 நாட்களே உள்ள நிலையில் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற கூட்டம்
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ந் தேதி முதல் ஆகஸ்டு 13-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் கூட்டத்தொடரின் முதல்நாளில் இருந்து வேளாண் சட்டங்கள், பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன.
இதனால், 16 நாட்களாக இரு அவைகளும் முடங்கின. பாராளுமன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அமளிக்கு நடுவே சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன.
ஒத்திவைப்பு
இந்த நிலையில், கூட்டத்தொடரின் 17வது நாளான இன்று (புதன்கிழமை) மக்களவை தொடங்கியவுடன், மீண்டும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அமளியால் தொடர்ந்து லோக்சபா முடங்கி வருவதால், அவையை 2 நாள்களுக்கு முன்னதாகவே முடித்துக் கொள்ளப்படுவதாக கூறி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.