2022 ஜூலை முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு தடை
1 min read
Ban on single-use plastics from July 2022
13.8.2021
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
பிளாஸ்டிக்
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த சட்டம் 2021-ஐ ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு 2022 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.