தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே கடமை; பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர்
1 min read
Duty to fulfill election promises; Minister of Finance in the budget speech
13/8/2021
தமிழக சட்டசபையில் முதன் முதலாக, காகிதமில்லா ‘இ – பட்ஜெட்’ நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முதல் கடமை என பட்ஜெட் உரையில் நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட்
சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், 2021 – 2022ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை, இன்று காலை 10 மணிக்கு, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தியாகராஜன், சட்டசபையில் முதன் முறையாக, இன்று காகிதமில்லா இ – பட்ஜெட் தாக்கல் செய்தார். இதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மேஜையிலும் கணினி பொருத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் வாசிக்கும் பட்ஜெட் உரை, கணினி திரையில் ஒளிரும். இது தவிர அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், கையடக்க தொடுதிரை கணினி வழங்கப்பட்டுள்ளது. இதிலும், பட்ஜெட் உரை இடம் பெற்றது.
பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது:
வாக்குறுதிகள்
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதற்கு ஏற்ப சேவையாற்ற உள்ளோம். கருணாநிதியின் நிர்வாக திறமை அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். படிப்படியாக தாக்கல் செய்யப்படும். திருத்திய வரவு செலவு அறிக்கை, இந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு பொருந்தும். 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா 2வது அலை, ஏற்கனவே பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அரசின் கடன்சுமையை சரி செய்து நிதிநிலையை மேம்படுத்துவது நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. எந்தவொரு சிக்கல்களையும் சரி செய்யும் முதல்படி, அதன் ஆழத்தை புரிந்து கொள்வது. கடந்த அரசின் நிதி நிர்வாக தவறுகள், வெள்ளை அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக வெளிநடப்பு
சட்டசபை துவங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் சில கோஷங்களை எழுப்பினர். எந்த பிரச்சனையாக இருந்தாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்றார். ஆனால் இதனை ஏற்காத அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.