June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் திடீர் இடமாற்றம்

1 min read

Sudden relocation of the head of the Indian division of the Twitter company

13-8-2021-
டுவிட்டர் நிறுவன இந்திய பிரிவு தலைவர் மணிஷ் மகேஷ்வரி அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டுவி்ட்டர்

டுவிட்டர் நிறுவனம் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக தொடர்ந்து புகார் கூறப்பட்ட நிலையில் இந்திய பிரிவு அதிகாரி மணிஷ் மகேஷ்வரி அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களின் 5 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதால் சர்ச்சையானது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே தங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் புகார் அளித்து இருந்தது.

டுவிட்டர் நிறுவனம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார் கூறப்படும் நிலையில் இந்திய பிரிவு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் வேறு அதிகாரி நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டூல்கிட்

மணீஷ் மகேஸ்வரிக்கு டூல்கிட் விவகாரத்தில் மத்திய அரசு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. ஒரு வேலையையோ அல்லது பிரசாரத்தையோ மேற்கொள்வதற்கு அது குறித்த தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமே டூல் கிட் எனப்படுகிறது. பொதுவாக இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் போது, அதில் பங்கெடுப்பவர்களுக்கு அந்த பிரசாரத்தினை எப்படி முன்னோக்கி நகர்த்துவது என்பதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய டூல் கிட் பயன்படுத்தப்படுகிறது.

இந்த டூல் கிட் விவகாரத்தை முன்னிலைப்படுத்தி மணீஷ் மகேஸ்வரிக்கு கடும் நெருக்கடிகள் உண்டாகின.

விவசாயிகள் போராட்டம்

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான பிரசார வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய அப்படி ஒரு டூல் கிட்டைத் தான் பிப்ரவர் 4 அன்று சுவீடனைச் சேர்ந்த புகழ்பெற்ற இளம் சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கிரேட்டா துன்பர்க் மீது வழக்குப் பதிவு செய்தது. உடனே இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கத் தேவையில்லை என்றும், அது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஒரே கருத்தை தெரிவித்தனர்.

இதனால், டூல் கிட மணீஷ் மகேஸ்வரிக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

அதேபோல், ஏத்தியஸ்ட் ரிபப்ளிக் என்ற அமைப்பின் டுவிட்டர் கணக்கில் இந்து கடவுளான காளியை அவமதித்துள்ளதாகவும், சமூகத்தில் மதவெறுப்பை தூண்டும் வகையில் அது பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தவறான வரைபடம்

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ பதிவு, டுவிட்டர் இணையதளத்தில் தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்டது ஆகியன தொடர்பாக மணீஷ் மகேஸ்வரி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

புதிய பொறுப்பு

இப்படியாக வழக்குகள், விசாரணைகள் என்று சிக்கித் தவித்த மணீஷ் மகேஸ்வரி மாற்றப்பட்டார். அவருக்கு தற்போது டுவிட்டர் நிறுவனம் புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக டுவிட்டரின் ஜப்பான், தென் கொரியா, ஆசியா பசிபிக் பிராந்தியத்தின் துணைத் தலைவர் யூசசமோட்டோ, “இந்தியாவில் 2 வருடங்களுக்கும் மேலாக தலைமைப் பொறுப்பிலிருந்த தங்களுக்கு நன்றி. தங்களை வருவாய் வழிகாட்டுதல், உலகளாவிய வியாபாரப் பிரிவுக்குப் பொறுப்பாளராக நியமிக்கிறோம். வாழ்த்துகள். டுவிட்டரின் மிக முக்கியமான பதவியில் நீங்கள் அமரவிருக்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.