தமிழகத்தில் இன்றைய கொரோனா 1,933; சாவு 34
1 min read
Today’s Corona 1,933 in Tamil Nadu; Death 34
13-8-2021
தமிழகத்தில் இன்று 1933 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 34 பேர் இறந்துள்ளனர்.
தமிழக கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று மட்டும் 1933 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,84,969 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,101 பேர் ஆண்கள், 832 பேர் பெண்கள். 1,887 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா. இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,30,096 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 34 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,462 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக இருந்த நிலையில் இன்று(13ம் தேதி) 211ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கோவையில் தான் இன்று அதிக பாதிப்பு. அந்த மாவட்டத்தில் 236 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. சென்னையில் 211 பேருக்கும், ஈரோட்டில் 177 பேருக்கும், சேலத்தில் 120 பேருக்கும், தஞ்சையி் 114 பேருக்கும், செங்கல்பட்டில் 108 பேருக்கும், திருப்பூரில் 105 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 15 பேருக்கும், தென்காசியில் 8 பேருக்கும், தூத்துக்குடியில் 11 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மூன்று மாட்டங்களில் இன்று உயிரிழப்பு இல்லை.