July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,916 பேருக்கு கொரோனா; 34 பேர் சாவு

1 min read

Corona for 1,916 people in Tamil Nadu today; 34 deaths

14.8.2021

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1933 -ல் இருந்து 1,916 ஆக குறைந்துள்ளது. 34 பேர் உயிரிழந்து உள்ளனர். 1866 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழக கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,60,306 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,1916 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,86,885 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,061 பேர் ஆண்கள், 855 பேர் பெண்கள். இன்று 1,866 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,31,962 ஆக உயர்ந்துள்ளது.

34 பேர் சாவு

இன்று 34 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,496 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 211 ஆக இருந்த நிலையில் இன்று(14ம் தேதி) 219ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோடு சேலம் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது.

கோவை

கோவையில் இன்று 223 பேருக்கும், ஈரோட்டில் 185 பேருக்கும், சேலத்தில் 130 பேருக்கும், செங்கல்பட்டில் 116 பேருக்கும், தஞ்சாவூரில் 112 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 14 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 6 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் இன்றும் உயிரிழப்பு இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.