இந்தியாவில் மேலும் 38,667 பேருக்கு கொரோனா; 478 பேர் சாவு
1 min read
Corona for another 38,667 in India; 478 deaths
14/8/2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். 478 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்திய அளவில் கொரோனா நிலவரம் பற்றி இன்று காலை ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இன்று காலை கடந்த 24 மணி நேரத்தில் 38,667 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,21,56,493 ஆக அதிகரித்தது.
ஒரே நாளில் 34,743 பேர் நலமடைந்து வீடு திரும்பிள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் தொற்றில் இருந்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,13,38,088 ஆனது.
இந்தியாவில் தற்போது, 3,87,673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
478 பேர் சாவு
ஒரே நாளில் 478 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்தனர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 4,30,732 ஆனது.
தற்போது வரை 53.61 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 2.05 சதவிகிதமாக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.