தமிழகத்தில் இன்று 1,896 பேருக்கு கொரேனா; 23 பேர் சாவு
1 min read
Corona for 1,896 people in Tamil Nadu today; 23 deaths
15.8.2021
தமிழகத்தில் இன்று 1,896 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. 23 பேர் உயிரிழந்து உள்ளனர். 1842 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழக கொரோனா நிலவரம் பற்றி இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்ள் வருமாறு:-
தமிழகத்தில் 1,57,587 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,1896 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,88,781 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,090 பேர் ஆண்கள், 806 பேர் பெண்கள். இன்று 1,842 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா. இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,33,804 ஆக உயர்ந்துள்ளது.
23 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 23 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,519 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 219 ஆக இருந்த நிலையில் இன்று(15ம் தேதி) 216 ஆக சற்று குறைந்துள்ளது.
கோவை
கோவையில் இன்று 225 பேருக்கும், ஈரோட்டில் 179 பேருக்கும், சேலத்தில் 127 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும, தஞ்சாவூரில் 106 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 16 பேருக்கும், தென்காசியில் 12 பேருக்கும் தூத்துக்குடியில் 5 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டது.