சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து சசி தரூர் விடுவிப்பு
1 min read
Sasi Tharoor acquitted of Sunanda Pushkar death case
18.8.2021
சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து சசி தரூர் எம்.பியை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுனந்தா புஷ்கர் மரணம்
கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள சொகுசு விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரின் மரணம் தொடர்பாக சசி தரூர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 498-ஏ, 306 பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து சசிதரூர் எம்.பி-யை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.