அதிமுக முன்னாள் எம்.பி. செங்குட்டுவன் மரணம்
1 min read
AIADMK ex-MP The death of the redhead
19.8.2021
அதிமுக முன்னாள் எம்.பி. உறுப்பினர் செங்குட்டுவன் உடல்நலக்குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.
செங்குட்டுவன்
வேலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி செங்குட்டுவன் (வயது 65). காட்பாடி திருநகரில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் கடந்த ஒரு வாரமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பா.செங்குட்டுவன் இன்று காலை காலமானார். அவருடைய உடல் காட்பாடி திருநகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று மாலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எரிவாயு தகன மேடையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
செங்குட்டுவனின் மனைவி ஜெயந்தி வேலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார் அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு வேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை 59,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 30 ஆண்டுகளுக்கு பின்னர் வேலூரில் அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற 2-வது வேட்பாளராக இவர் கருதப்படுகிறார்.
2001-ல் இருந்து 2006 வரை வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞராகவும், 2011 முதல் 2014 வரை பொது வழக்கறிஞராகவும் பதவி வகித்தார். 1980-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் தனது மாணவர் நாட்களில் அ.தி.மு.க. உறுப்பினராக இருந்தார். அ.தி.மு.க இரண்டாக உடைந்தபோது அ.ம.மு.க.வில் சேர்ந்தார். பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.