June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆப்கானிஸ்தான் சுதந்திர தினவிழா பேரணியில் துப்பாக்கி சூடு; பலர் பலி

1 min read

Shooting at Afghanistan Independence Day rally; Many were killed

19.8.2021
ஆப்கானிஸ்தானில் சுதந்திர தின பேரணி நடத்தியவர்கள் மீது தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதிலும், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலிலும் சிக்கி பலர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

சுதந்திர தினம்

ஆங்கிலேயர்களிடம் இருந்து கடந்த 1919ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி ஆப்கானிஸ்தான் விடுதலை பெற்றது. இதனை முன்னிட்டு, இன்று, அசாதாபாத் என்ற இடத்தில் பேரணி நடந்தது. அதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள், அந்நாட்டு தேசிய கொடியுடன் பங்கேற்றுள்ளனர். சிலர் தலிபான்களின் கொடியை கிழித்து போட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு வந்த தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பலர் பலி

இதனால் பேரணியில் பங்கேற்றவர்கள் தப்பி ஓட முயற்சிக்கையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் பலியாகியுள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் பேரணியில் பங்கேற்ற ஒருவர் தெரிவித்தார்.

ஜலாலாபாத் நகரில் போராட்டம் நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.