தமிழகத்தில் இன்று 1,668 பேருக்கு கொரோனா; 24 பேர் சாவு
1 min read
Corona for 1,668 people in Tamil Nadu today; 24 deaths
20.8.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,702 -ல் இருந்து 1,668 ஆக குறைந்துள்ளது. 24 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,887 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழக கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல் வருமாறு:-
தமிழகத்தில் 1,63,177 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,1,668 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,97,603 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 942 பேர் ஆண்கள், 726 பேர் பெண்கள்.
தமிழகத்தி்ல் 1,887 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,43,319 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 24 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,663 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக இருந்த நிலையில் இன்று (20ம் தேதி) 185 ஆக குறைந்துள்ளது. சென்னையில் ஒருவர் மட்டுமே இன்று உயிரிழந்துள்ளார்.
கோவையில் இன்று 199 பேருக்கும், ஈரோட்டில் 158 பேருக்கும், செங்கல்பட்டில் 102 பேருக்கும், தஞ்சாவூரில் 98 பேருக்கும், சேலத்தில் 85 பேருக்கும், திருப்பூரில் 80 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருப்பூரில் இன்று அதிகபட்டசமாக 5 பேர் இறந்துள்ளனர். திருச்சி, கடலூரில் தலா 3 பேரும், கோவை, நாகப்பட்டினம், தஞ்சை
நெல்லையில் 26 பேருக்கும், தென்காசியில் 9 பேருக்கும், தூத்துக்குடியில் 10 பேருக்கும் இன்று கொரோனாகண்டறியப்பட்டு உள்ளது.