2024-நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்; எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு
1 min read
Get ready for the 2024-parliamentary election; Sonia Gandhi calls on opposition
20/-8/2021
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட்டம்
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் இணைந்து பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்றதால், கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
எதிர்கட்சிகளின் இந்த ஒற்றுமையை தக்கவைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடைபெற்றது.
2024 தேர்தல்
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வரை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தொடர வேண்டும் என்றார். மேலும், தேர்தலுக்கான திட்டமிடுதலை இப்போதே தொடங்க வேண்டும்” என்றார்.