June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு

1 min read

Opposition parties have stated they will not run in the by-elections

20.8.2021
பாஜகவின் மத்திய அரசுக்கு எதிராக செப்.20 முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் இணைந்து பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்றதால், கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

எதிர்கட்சிகளின் இந்த ஒற்றுமையை தக்கவைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செப்.20 முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்தக் கூட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: –

கண்டனம்

விவாதத்திற்கு அனுமதி அளிக்க மறுத்தது, பெகாசஸ் முறைகேடு குறித்து பதில் அளிக்க மறுப்பு, விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய மறுத்தது, கொரோனா விவகாரத்தில் மோசமான மேலாண்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மறுத்தல் உள்ளிட்டவைகள் மூலம் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு இடையூறு செய்த மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும். நியாயமான முறையில் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.