தமிழகத்தில் இன்று 1,652 பேருக்கு கொரோனா; 23 பேர் சாவு
1 min read
Corona for 1,652 people in Tamil Nadu today; 23 deaths
21.8.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,668 -ல் இருந்து 1,652 ஆக குறைந்துள்ளது. 23 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,859 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,59,213 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,1,652 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,99,255 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 968 பேர் ஆண்கள், 684 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்று 1,859 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,45,178 ஆக உயர்ந்துள்ளது.
23 பேர் சாவு
இன்று 23 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,686 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக இருந்த நிலையில் இன்று (21ம் தேதி) 183 ஆக குறைந்துள்ளது.
கோவையில் இன்று 205 பேருக்கும், ஈரோட்டில் 152 பேருக்கும், தஞ்சாவூரில் 95 பேருக்கும், செங்கல்பட்டில் 99 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 15 பேருக்கும், நெல்லையில் 8 பேருக்கும், தூத்துக்குடியில் 13 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.