இந்தியாவில் மேலும் 30,948 பேருக்கு கொரோனா; 403 பேர் சாவு
1 min read
Corona for a further 30,948 in India; 403 deaths
22.8.2021
இந்தியாவில் மேலும் 30,948 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 38,487 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்தியாவில் கொரோனா
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்தியாவில் நேற்று மேலும் 30,948 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,24,24,234 ஆனது.
மேலும் ஒரே நாளில் 38,487 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,16,36,469 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,53,398 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
403 பேர் சாவு
இந்தியாவில் இருந்து கொரோனா காரணமாக நேற்று 403 பேர் இறந்தனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,367 ஆனது.
நேற்று மட்டும் 52,23,612 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 58,14,89,377 ஆக அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் நேற்று 15,85,681 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதன் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 50,62,56,239 ஆக உயர்ந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.