எங்களை மீட்டுக் கொண்டுவந்த இந்தியாவுக்கு நன்றி- டெல்லி வந்த ஆப்கன் பெண் உருக்கம்
1 min read
The Afghan woman who came to Delhi melted thanks to India that Gill rescued us
22.8.2021
‛‛ஆப்கனில் என் வீட்டை தாலிபான்கள் தீ வைத்து எரித்துவி்ட்டனர். எங்களை மீட்டுக்கொண்டுவந்த இந்தியாவுக்கு நன்றி” டெல்லி வந்த ஆப்கன் பெண் கூறினார்.
வெளியேறி வருகிறார்கள்
தலிபான் பயங்கரவாதிகள் அதிகாரத்தை கைப்பற்றியதால், ஆப்கனில் இருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர். இதனால் காபூலில் பதற்றம் நிலவுகிறது. விமான நிலையத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காத்திருக்கின்றனர்.
நேற்று முன்தினம் அங்கிருந்து தப்ப முயன்ற 150 இந்தியர்கள், காபூல் விமான நிலையம் அருகே தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பல மணி நேர விசாரணைக்குப் பின், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தலிபான்கள் அறிவித்தனர்.
ஆப்கன் பெண்கள்
இந்த நிலையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) காபூலில் இருந்து 107 இந்தியர்கள், 24 ஆப்கன் வாழ் சீக்கியர்கள் மற்றும் 2 அந்நாட்டு எம்.பி.,க்கள் உள்ளிட்ட 168 பேர் இந்திய விமானப்படை விமானம் மூலம் டெல்லி அருகே உள்ள விமானப்படை தளத்திற்கு பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
டெல்லி வந்தவர்களில் ஆப்கனைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். ஒரு கைக்குழந்தையை பாஸ்போர்ட் இல்லாமல், இந்திய அதிகாரிகள் டெல்லி அழைத்து வந்தனர்.
நன்றி
டெல்லி வந்த பின்னர் ஆப்கனை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ‛‛ஆப்கனில் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. எனது வீட்டை தலிபான்கள் எரித்து விட்டனர். இதனால், நான், எனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வெளியேறும் சூழல் ஏற்பட்டது. என்னை, இந்தியாவைச் சேர்ந்த சகோதரர்கள், சகோதரிகள் தான் மீட்டனர். எங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்,” எனக்கூறினார்.