காஷ்மீரில் பதுங்கு குழி; சீன எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
1 min read
Bunker in Kashmir; Seizure of weapons including Chinese grenades
24.8.2021
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்திய ராணுவம் பதுங்கு குழியை கண்டறிந்து சீன எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றி உள்ளது.
பதுங்கு குழி
ஜம்மு மற்றும் காஷ்மீரின் வடக்கே பந்திபோரா நகரில் நாக்மார்க் வனப்பகுதியில் இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள் படை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
இதில் பதுங்கு குழி ஒன்றை கண்டறிந்துள்ளது. அதில் இருந்து 2 சீன எறிகுண்டுகள் மற்றும் வேறு சில எறிகுண்டுகளுடன் அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளது.
சீன ஆயுதங்கள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது இந்திய பாதுகாப்பு படைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த பயங்கரவாதிகளை தேடும்பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.