June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் திடீர் நில அதிர்வு

1 min read

Sudden earthquake in Chennai

24/8/2021
சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கத்தால் சென்னையின் கடலோர பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

நிலநடுக்கம்

ஆந்திரா காக்கிநாடாவில் இருந்து 296 கி.மீ., தொலைவில் வங்கக்கடலில் 10 கி.மீ., ஆழத்தில் இன்று பகல் 12.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆகப் பதிவாகியிருந்தது. இதனை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் உறுதி செய்தது. ஆந்திரா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் 12.50 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. திருவான்மியூர், அடையாறு, கேளம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது.

சென்னையில் பல இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டாலும், எவ்வித அசம்பாவித சம்பவமும் ஏற்பட வில்லை. வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.