போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம்; புதிய மசோதா நிறைவேற்றம்
1 min read
Power to cancel forged deeds; New bill passed
2/9/2021
போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
போலி பத்திரப்பதிவு
போலி பத்திரப்பதிவு பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. போலியாக ஒருவர் பத்திரப்பதிவு செய்திருந்தால் அதனை நீதிமன்றம் மட்டுமே ரத்து செய்ய முடியும் என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது.
இனி பத்திரப்பதிவு தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியும் என்ற வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.