இந்தியாவில் மேலும் 45,352 பேருக்கு கொரோனா; 366 பேர் சாவு
1 min read
Corona for another 45,352 in India; 366 deaths
3.9.2021
இந்தியாவில் மேலும் புதிதாக 45,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 366 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,29,57,937 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 366 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,39,895 ஆக உயர்ந்துள்ளது.
டிஸ்சார்ஜ்
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34,791 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,63,616 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,99,778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 67,09,59,968 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.