July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆழ்வார்குறிச்சி அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயிலுக்கு ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்

1 min read

Renovation work for Alwarkurichi Arulmigu Vanniyappar Temple at an estimated cost of Rs. 9 crore

4.9.2021
கீழப்பாவூர், ஆழ்வார்குறிச்சி கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளர்.

அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவித்த மேலும் பல அறிவிப்புகள் வருமாறு:-

மருத்துவ வசதி

  1. பக்தர்கள் அதிகளவில் வருகைபுரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும். இதற்காக ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  2. திருக்கோயில்களுக்குச் சொந்தமான 114 சமய நூலகங்கள் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். தேவைகளின் அடிப்படையில் புதிய சமய நூலகங்கள் உருவாக்கப்படும்.
  3. திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை விழிப்புடன் பாதுகாத்து மீட்பதற்கு 38 மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில் வட்டாட்சியர்கள் உள்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்கான செலவு ஆண்டொன்றிற்கு ரூபாய் 8 கோடியே 18 இலட்சமாகும்.
  4. திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திருக்கோயில் பணியாளர்களுக்கு நிர்வாகப் பயிற்சி மையம் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
  5. ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் ரூபாய் 15 கோடி செலவில் கட்டப்படும்.
  6. துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு 108 புதிய ஊர்திகள் ரூபாய் 8 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.

தரமான திருநீறு

  1. திருக்கோயில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தரமான திருநீறு மற்றும் குங்குமப் பிரசாதம் வழங்குவதற்காக 8 திருக்கோயில்களில் தயாரித்து, பிற திருக்கோயில்களுக்கும் வழங்கிட ரூபாய் 3 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  2. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிருவாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் ஆண்டுக்கான அரசு மானியம் ரூபாய் 3 கோடியிலிருந்து ரூபாய் 6 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
  3. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 225 திருக்கோயில்களுக்கு நிருவாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக வழங்கப்பட்டு வரும் அரசு மானியம் ரூபாய் 1 கோடியிலிருந்து ரூபாய் 3 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
  4. முதற்கட்டமாக 10 முக்கியத் திருக்கோயில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.
  5. சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், திருக்கோயிலின் வருவாயைப் பெருக்கும் வகையில் ரூபாய் 50 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்டப்படும்.
  6. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள 1,000 திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஏற்கனவே தலா ரூபாய் 1 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் 1,250 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூபாய் 2 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  7. கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டத்தின்படி கிராம பகுதிகளில் அமைந்துள்ள 1,000 திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஏற்கனவே தலா ரூபாய் 1 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் 1,250 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூபாய் 2 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தூய்மைப் பணி

  1. “திங்கள் தோறும் திருக்கோயில்களில் தூய்மைப்பணி” திட்டத்தின் கீழ் திருக்கோயில்களின் அனைத்து இடங்களிலும் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  2. சென்னை, பழநி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களைப் பேணிப் பாதுகாக்க மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் ரூபாய் 5 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் தொடங்கப்படும்.
  3. திருக்கோயில்கள் சார்பாக பக்தர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 22 திருமண மண்டபங்கள் ரூபாய் 53 கோடியே 75 இலட்சம் செலவில் கட்டப்படும்.

பூசாரிகளுக்கு ஓய்வூதியம்

  1. துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு தமிழ்நாடு திருக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத் தொகை ரூபாய் 3,000 -லிருந்து ரூபாய் 4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மேலும் கிராமப்புற பூசாரிகள் நலவாரிய உறுப்பினர் மரணமடைந்தால் இறுதிச்சடங்கிற்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூபாய் 2,000/- லிருந்து ரூபாய் 5,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். உறுப்பினர் மரணடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூபாய் 15,000/- லிருந்து ரூபாய் 50,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

  1. திருக்கோயில்களுக்கு பெருமளவில் வருகை தரும் பக்தர்களுக்கான முழுமையான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த, 40 முதுநிலைத் திருக்கோயில்களுக்கான ஒருங்கிணைந்த பெருந்திட்டம் (Master Plan) வகுக்கப்பட்டு ரூபாய் 200 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
  2. அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 6 இடங்களில் ரூபாய் 21 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  3. திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  4. பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் பக்தர்களின் அனைத்து தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூபாய் 125 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
  5. ஆண்டு முழுவதும் அதிகளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்லும் பழநி, சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி மற்றும் இராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூபாய் 250 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
  6. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் திருப்பணி மேற்கொள்வதற்காக நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் உட்பட 300 திருக்கோயில்களில் இருந்து பெறப்பட்ட திருப்பணி முன்மொழிவுகள் முறையாக பரிசீலிக்கப்பட்டு குடமுழுக்கிற்கான திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பணிகளுக்குத் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும்.

புதிய தேர்கள்

  1. 18 திருக்கோயில்களுக்கு ரூபாய் 8 கோடியே 70 இலட்சம் செலவில் புதிய திருத்தேர்கள் செய்யப்படும்.
  2. திருக்கோயில்களுக்குச் சொந்தமான 37 திருக்குளங்கள் ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
  3. மதுரையில், திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி ரூபாய் 35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  4. காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட இடத்தில் திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வணிக வளாகம் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஆழ்வார்குறிச்சி

  1. திருவேற்காடு அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில் உட்பட 30 அம்மன் திருக்கோயில்களுக்கு 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  2. ஆன்மிகச் செம்மல் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடங்களை பாதுகாக்கும் நோக்கோடு சுற்றுச்சுவர் மற்றும் வனம் அமைப்பதற்கு ரூபாய் 15 கோடி செலவிடப்படும்.
  3. 34 சைவ திருத்தலங்களுக்கு ரூபாய் 9 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  4. தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயிலுக்கு ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  5. 24 வைணவத் திருத்தலங்களுக்கு ரூபாய் 5 கோடியே 68 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  6. திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி, ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்களில் ரூபாய் 4 கோடியே 50 இலட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  7. விழுப்புரம் மாவட்டம், சிங்கவரம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூபாய் 3 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  8. மதுரை, அழகர்கோயில், அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதையை மேம்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூபாய் 7 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  9. திருக்குவளை, எட்டுக்குடி, சுப்பிரமணியர் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில்களில் ரூபாய் 2 கோடியே 20 இலட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

கீழப்பாவூர்

  1. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், கீழப்பாவூர் அருள்மிகு திருவாலிஸ்வரர் திருக்கோயிலில் ரூபாய் 1 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  2. திருநீர்மலை, அருள்மிகு அரங்கநாதப் பெருமாள் திருக்கோயிலில் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  3. சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் சித்திரசபையில் ரூபாய் 90 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  4. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் மின்வசதி ரூபாய் 90 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
  5. கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் ரூபாய் 85 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  6. கடலூர் மாவட்டம், பொய்யனப்பாடி, அருள்மிகு ஆண்டவர் செல்லியம்மன் திருக்கோயில் மதிற்சுவர் ரூபாய் 80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  7. அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வடகிழக்கு கோட்டை மதிற்சுவர் ரூபாய் 62 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
  8. அட்டவீரட்டானத் திருத்தலங்களுள் இரு திருக்கோயில்களில் ரூபாய் 60 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  9. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பட்டீஸ்வரம் அருள்மிகு பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயிலில் ரூபாய் 60 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  10. கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், அருள்மிகு திருவேங்கடநாத பெருமாள் திருக்கோயிலில் ரூபாய் 37 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  11. திருப்பத்தூர் மாவட்டம், மடவாளம், அருள்மிகு அங்கநாதீஸ்வரர் திருக்கோயிலில் ரூபாய் 35 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  12. கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

பாபநாசம்

  1. திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், அருள்மிகு கோடிலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் ரூபாய் 24 இலட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  2. கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை, அருள்மிகு மகாதேவர் திருக்கோயிலுக்குச் சொந்தமான பழைய அரண்மனை கட்டடத்தில் இயங்கி வந்த பள்ளிகள் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.
  3. சென்னை, அருள்மிகு காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலுக்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித் திருத்தேர் செய்யப்படும்.
  4. இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித் திருத்தேர் செய்யப்படும்.
  5. 9 திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருத்தேர்கள் ரூபாய் 2 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
  6. திருத்தேர்கள் இயற்கைச் சீற்றங்களால் பழுதடையாது பாதுகாத்திட திருத்தேர் கொட்டகைகள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ரூபாய் 10 கோடி செலவில் அமைக்கப்படும்.

திருக்குளம்

  1. சென்னை, மாதவரம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலுக்குப் புதிய திருக்குளம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
  2. பூத்துக் குலுங்குகின்ற பூஞ்சோலைகளாக திருக்கோயில்கள் காட்சியளிப்பதற்கு, 100 திருக்கோயில்களில் ரூபாய் 15 கோடி செலவில் புதியதாக மலர்த் தோட்டங்கள் அமைத்து, தல மரங்களையும் நட்டுப் பராமரிக்கப்படும்.
  3. இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், அருள்மிகு இலட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
  4. அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில்

ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய விருந்து, காதுகுத்து மற்றும் முடிகாணிக்கை செலுத்தும் ஒன்பது மண்டபங்கள் கட்டப்படும்.

  1. வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அன்னதானக் கூடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய முடி காணிக்கை மண்டபம் ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  2. இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூபாய் 2 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் 20 விருந்து மண்டபங்கள் கட்டப்படும்.
  3. சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 18 இடங்களில் உள்ள சிதிலமடைந்த வாடகைக் குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிய வணிக வளாகம், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  4. சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரர் பங்களிப்போடு ரூபாய் 2 கோடி செலவில் பணியாளர் குடியிருப்புகளும், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்.
  5. மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள இடத்தில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்படும்.
  6. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் முடிகாணிக்கை மண்டபம் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  7. மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆலங்குளத்தில் உள்ள நிலத்திற்கு ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டப்படும்.

மடப்புரம்

  1. சிவகங்கை மாவட்டம், மடப்புரம், அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வணிக வளாகம், பக்தர்கள் தங்கும் அறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  2. அழகர்கோயில், அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் சஷ்டி மண்டபம் கட்டப்படும்.
  3. திருப்பூர் மாவட்டம், தூரம்பாடி, அருள்மிகு குலமாணிக்கீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் புதிய இளைப்பாறும் மண்டபம் ரூபாய் 85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  4. கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சி, அருள்மிகு மகாதேவர் திருக்கோயிலின் சுற்றுச் சுவர் மற்றும் படித்துறை பராமரிப்புப் பணிகள் ரூபாய் 75 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
  5. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அங்காளம்மன் திருக்கோயில் வளாகத்தில் ரூபாய் 55 இலட்சம் மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்படும்.
  6. திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்கோடு, அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்கள் வசதிக்காக ரூபாய் 50 இலட்சம் செலவில் தங்கும் விடுதி ஏற்படுத்தப்படும்.
  7. மருதமலை, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிய முடிகாணிக்கை மண்டபம் ரூபாய் 45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  8. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு, விரிஞ்சிபுரம், அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில் அன்னதானக் கூடம் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  9. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அங்காளம்மன் திருக்கோயில் வளாகத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  10. மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடம் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  11. சென்னை, வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பல்நோக்குக் கட்டடம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  12. திருக்கோயிலுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களிலிருந்து திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் கொள்கைகளை உருவாக்கிட தேர்ந்த ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படுவர்.
  13. சென்னை, கொசப்பேட்டை, அருள்மிகு ஆதி மொட்டையம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான சந்தை ரூபாய் 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
  14. காரைக்குடி, அருள்மிகு கொப்புடைநாயகியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான சிதிலமடைந்த நகர வாரச் சந்தையை அகற்றி, ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் புதியதாக கட்டப்படும்.

பயிற்சிப் பள்ளிகள்

  1. சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
  2. மாமல்லபுரம், ஆளவந்தார் அறக்கட்டளையில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் வைணவ பிரபந்த பாடசாலை ஏற்படுத்தப்படும்.
  3. சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்களில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில், புதிய ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.
  4. திருத்தணிகை, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலின் உபக்கோயிலான அருள்மிகு கோட்டா ஆறுமுகசாமி திருக்கோயில் வளாகத்தில் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி ஏற்படுத்தப்படும்.
  5. திருவண்ணாமலை மற்றும் மதுரையில் அமைந்துள்ள ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
  6. திருச்சி, குணசீலம், அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் இயங்கிவரும் மனநலக் காப்பகம் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  7. திருநாகேஸ்வரம், அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள தவில், நாதஸ்வர இசைப்பள்ளி மேம்படுத்தப்படும்.
  8. ஸ்ரீவில்லிப்புத்தூர், அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் சார்பாக திவ்ய பிரபந்த பாடசாலை மீண்டும் தொடங்கப்படும்.
  9. திருப்பெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி புதியதாகத் தொடங்கப்படும்.
  10. திருக்கோயில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ வசதி, உணவு, குளியல் வளாகம், நடை பயிற்சி வசதி மற்றும் தேவையான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.

வணிக வளாகம்

  1. திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூபாய் 98 இலட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்படும்.
  2. ஓசூர், அருள்மிகு காளிகாம்பாள் காமாட்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மலர் வணிக வளாகம் ரூபாய் 80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  3. திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம், அருள்மிகு வேதபுரிஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

இதர பணிகள்

  1. நாகப்பட்டினம் இணை ஆணையர் மண்டலத்திற்கான ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் ரூபாய் 3 கோடியே 53 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  2. மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும்.
  3. முதுநிலை திருக்கோயில்களின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் முழு விவரக்காட்சிக் கையேடுகள் (Coffee Table Books) வெளியிடப்படும்.
  4. திருக்கோயில்களின் கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள் ஆய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும். மேலும், தேவையான இடங்களில் புதியதாகப் பொருத்தப்படும்.
  5. சூரிய ஒளி வெப்ப விளக்குகள் (Solar lights) தேவைப்படும் அனைத்துத் திருக்கோயில்களிலும் பொருத்தப்படும்.

இவ்வாறு, அமைச்சர் பி.கே. சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.