June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,592 பேருக்கு கொரோனா; 18 பேர் சாவு

1 min read

Corona for 1,592 people in Tamil Nadu today; 18 deaths

5.9.2021

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,575 -ல் இருந்து 1,592 ஆக சற்று அதிகரித்துள்ளது. 18 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,607 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,61,583 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,592 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,22,678 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 885 பேர் ஆண்கள், 707 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்று 1,607 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,71,378 ஆக உயர்ந்துள்ளது.

18 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 18 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தர்மபுரி, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், திருவண்ணமலை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், சென்னை, அரியலூர், கடலூர், திண்டுக்கல் கன்னியாகுமரி, நாமக்கல், திருவள்ளூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்தனர்.

இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,018 ஆக அதிகரித்து உள்ளது.

கோவை

கோவையில் இன்று 229 பேருக்கும், சென்னையில் 165 பேருக்கும், செங்கல்பட்டில் 127 பேருக்கும், ஈரோட்டில் 104 பேருக்கும்
நெல்லையில் 11 பேருக்கும், தென்காசியில் 10 பேருக்கும், தூத்துக்குடியல் 12 பேருக்கும் கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 167 ஆக இருந்த நிலையில் இன்று (05ம் தேதி) 165 ஆக குறைந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.