July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,587 பேருக்கு கொரோனா; 18 பேர் சாவு

1 min read

Corona for 1,587 people in Tamil Nadu today; 18 deaths

8.9.2021

தமிழகத்தில் இன்ற 1,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 18 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 1,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,27,365 ஆக உயர்ந்துள்ளது.

18 பேர் சாவு

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, சேலம், மயிலாடுதுறை ஆகிய மாட்டங்களில் தலா 2 பேரும், அரியலூர், கடலூர், தர்மபுரி, மதுரை, காஞ்சிபுரம், ராணிபேட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
இதையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,073 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,76,112 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 16,180 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில்1,60,303 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:-

கோவை – 232, சென்னை – 179, ஈரோடு – 117, செங்கல்பட்டு – 115, திருப்பூர் – 81

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் 10 பேருக்கும், தென்காசியில் 7 பேருக்கும், தூத்துக்குடியில் 12 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.