பாரதியாரின் எண்ணங்கள் பல தலைமுறைகளுக்கு நமக்கு ஊக்கமளிக்கும் – அமித்ஷா தமிழில் டுவீட்
1 min read
Bharathiyar’s thoughts will inspire us for many generations – Amitsha Tweet in Tamil
11.9.2021
புகழ்பெற்ற இந்திய கவிஞர், எழுத்தாளர் மற்றும் சுதந்திர போராட்டவீரர் மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினத்தில் நான் அவரை வணங்குகிறேன் என மத்திய உள்துறை மந்திரி அமிஷா கூறியுள்ளார்.
பாரதியார் 100வது ஆண்டு நினைவு நாள்
நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.
இதனையடுத்து பாரதியின் 100-வது ஆண்டு நினைவு நாளான இன்று, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும், பாரதியார் குறித்த கருத்துக்களை தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
புகழ்பெற்ற இந்திய கவிஞர், எழுத்தாளர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினத்தில் நான் அவரை வணங்குகிறேன்! பாரதியாரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு எண்ணற்ற மக்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவருடைய எண்ணங்கள் பல தலைமுறைகளுக்கு நமக்கு ஊக்கமளிக்கும்.’ என பதிவிட்டுள்ளார்.
புகழ்பெற்ற இந்திய கவிஞர், எழுத்தாளர் மற்றும் சுதந்திர போராட்டவீரர் மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினத்தில் நான் அவரை வணங்குகிறேன்!
பாரதியாரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு எண்ணற்ற மக்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவருடைய எண்ணங்கள் பல தலைமுறைகளுக்கு நமக்கு ஊக்கமளிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.