July 11, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,608 பேருக்கு கொரோனா; 22 பேர் சாவு

1 min read

Corona for 1,608 people in Tamil Nadu today; 22 deaths

12.9.2021

தமிழகத்தில் இன்று 1,608 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,55,807 மாதிரிகள் கொரோனாபரிசோதனை செய்யப்பட்டன. அதில்,தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1,607 பேரும் ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து வந்த ஒருவர் என 1,608 பேருக்கு கொரோனாஉறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,33,839 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனாஉறுதியானவர்களில் 929 பேர் ஆண்கள், 679 பேர் பெண்கள். இன்று 1,512 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,82,198 ஆக உயர்ந்துள்ளது.

22 பேர் சாவு

தமிழகத்தில் 22 பேர் கொரோனாபாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,168 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனாதொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக இருந்த நிலையில் இன்று 197 ஆக அதிகரித்துள்ளது
கோவையில் 212 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும், ஈரோட்டில் 160 பேருக்கும், தஞ்சையில் 115 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 18 பேருக்கும், தென்காசியில் 9 பேருக்கும், தூத்துக்குடியில் 9 பேருக்கும் கொரேனா உறுதி செய்யப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.