தமிழகத்தில் இன்று 1,580 பேருக்கு கொரோனா; 22 பேர் சாவு
1 min read
Corona for 1,580 people in Tamil Nadu today; 22 deaths
13.9.2021
தமிழகத்தில் இன்று 1580 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,53,584 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,580 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,35,419 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 906 பேர் ஆண்கள், 674 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 1,509 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,83,707 ஆக உயர்ந்துள்ளது.
22 பேர் சாவு
கொரோனா 22 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,190 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக இருந்த நிலையில் இன்று 185 ஆக குறைந்துள்ளது.
கோவை
கோவையில் இன்று 204 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், தஞ்சாவூரில் 109 பேருக்கும்,செங்கல்பட்டில் 105 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 5 பேருக்கும், தென்காசியில் 14 பேருக்கும், தூத்துக்குடியில் 10 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
கேரளா
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், கேரளாவில் தினசரி பாதிப்பு அதிக அளவிலேயே பதிவானது. கடந்த சில தினங்களாக புதிய தொற்று எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி பதிவான நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. நேற்று 20 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. 15,058 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.