மம்தா பானர்ஜியின் வேட்புமனுவில் 5 வழக்குகளை மறைத்துள்ளதாக பாரதீய ஜனதா குற்றச்சாட்டு
1 min read
BJP alleges concealment of 5 cases in Mamata Banerjee’s candidature
14.9.2021
மேற்கு வங்காளம் பவானிப்பூரில் போட்டியிடும் முதல்வர் மம்தா, தனது வேட்புமனுவில் 5 வழக்குகளை மறைத்துள்ளதாக பாரதீய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.
மேற்கு வங்காளத்தின் பவானிப்பூரில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவர் முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என்பதால், அங்கு வெற்றி பெறுவது முக்கியம். அதற்காக, சமீபத்தில் மம்தா வேட்புமனு தாக்கல் செய்தார்.
மம்தாவை எதிர்த்து பாரதீய ஜனதா சார்பில் பிரியங்கா திப்ரிவல் களமிறக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு பாரதீய ஜனதா அனுப்பியுள்ள கடிதத்தில், “மம்தா பானர்ஜி தாக்கல் செய்த வேட்புமனுவில், அவர் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளை மறைத்துள்ளார். அதனால், வேட்புமனுவிற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம்”
என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.