தமிழகத்தில் இன்று 1,658 பேருக்கு கொரோனா; 29 பேர் சாவு
1 min read
Corona for 1,658 people in Tamil Nadu today; 29 deaths
15.9.2021
தமிழகத்தில் இன்று கொரோனா 1,591-ல் இருந்து 1,658 ஆக சற்று அதிகரித்துள்ளது. 29 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் இன்று 1,50,740 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,658 பேருக்கு கொரோன உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,38,668 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,46,77,820 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 959 பேர் ஆண்கள், 699 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 1,542 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,86,786 ஆக உயர்ந்துள்ளது.
29 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 29 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,246ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக இருந்த நிலையில் இன்று (15ம் தேதி) 226 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 224 பேருக்கும், ஈரோட்டில் 130 பேருக்கும், செங்கல்பட்டில் 126 பேருக்கும், திருப்பூரில் 88 பேருக்கும், தஞ்சையில் 72 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 17 பேருக்கும், தென்காசியில் 8 பேருக்கும், தூத்துக்குடில் 10 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.