தமிழகத்தில் அதிகரித்து வரும்கொரோனா- இன்றைய பாதிப்பு 1,693; சாவு 25
1 min read
Corona on the rise in Tamil Nadu- Today’s impact is 1,693; Death25
16.9.2021
தமிழகத்தில் இன்று கொரோனா 1,693 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,658 ஆக பதிவான நிலையில் இன்று 1,693 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,40,361 ஆக உயர்ந்துள்ளது.
25 பேர் சாவு
இன்று மேலும் 25 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,271 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் நேற்று 1,548 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,88,334 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 16,756 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,53,721 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:-
கோவை – 206, சென்னை – 202, செங்கல்பட்டு – 135, ஈரோடு – 134, திருப்பூர் – 110, தஞ்சாவூர் – 108.
நெல்லையில் 18 பேருக்கும், தென்காசியில் 11 பேருக்கும், தூத்துக்குடியில் 9 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உ்ளளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.