June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீர் பண்டிட் குடும்பங்களை சொந்த ஊரில் குடியேற்ற மத்திய அரசு திட்டம்

1 min read

Central government plan to resettle Kashmir Pandit families in their hometown

17.9.2021
காஷ்மீரில் அடிக்கடி பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மறுபுறம் சீனாவும் பாகிஸ்தானும் காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றன. இதனால் காலகாலமாக காஷ்மீரில் வாழ்ந்த காஷ்மீர் பண்டிட் இந்து குடும்பங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, பிழைப்புக்காக மற்ற மாநிலங்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

தற்போது காஷ்மீரில் நிலைமை சற்று இயல்புக்குத் திரும்பி உள்ளதால் வெளியேறிய காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் மீண்டும் தங்கள் சொந்த மாநிலத்துக்கு குடியேறி வருவது குறிப்பிடத்தக்கது.

360 குடும்பங்கள்

பயங்கரவாத அச்சுறுத்தலை அடுத்து காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட 360 காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் மீண்டும் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப உள்ளனர். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஒன்றிய அரசு தற்போது ஓர் ஏற்பாடு செய்துள்ளது. 40 கோடி ரூபாய் மதிப்பில் காஷ்மீர் பண்டிட் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரமைக்க புதிய முகாம்கள் உருவாக்கப்படும் என்று ஒன்றிய மந்திரி சர்பந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.