தென்காசி மாவட்டத்தில் போட்டியிட திமுகவினர் விருப்பமனு
1 min read
DMK wants to contest in Tenkasi district
17.8.2021-
தென்காசி தெற்கு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுளளவர்கள் தி.மு.க.வினர் தென்காசி மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளரும் வருவாய்த்துறை அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனிடம் விருப்ப மனுக்கள் வழங்கினார்கள்.
தி.மு.க.வினர்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மனு கொடுக்கும் நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு திமுக நிர்வாகிகளுடன் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார்.
200 பேர்
இதில் திமுக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா, திமுக ஒன்றிய செயலாளர்கள் வெற்றி விஜயன், செல்லத்துரை, மாரிவண்ணமுத்து, சிவனுப் பாண்டியன், சீனித்துரை, குமார், அழகுசுந்தரம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.